கோவையில் இரண்டு பெண்களை காரில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை

கோவையில் சரவணம்பட்டி வெற்றி விநாயகர் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து இரண்டு பெண்களை காரில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து இரண்டு பெண்களை காரில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி வெற்றி விநாயகர் நகரில் அதிதி இன் சர்வீஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியூரைச் சேர்ந்த ராஜா, சிவகுமார் மற்றும் இரண்டு பெண்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். ராஜ்குமார் ஒரு அறையிலும் இரண்டு பெண்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் ஹரிஹரன் என்பவரிடம் சிவகுமார் எந்த அறையில் தங்கியுள்ளார் என கேட்டுள்ளனர்.

உடனே ஹரிஹரன் சிவகுமாரை செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டபோது நான் யாரையும் வர சொல்லவில்லை என தெரிவித்துள்ளார். உடனே ஹரிஹரன் அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஹரிஹரனை அரிவாளால் தாக்கி விட்டு மிரட்டல் விடுத்தது.

இதனால் பயந்துபோன ஹரிஹரன் சிவகுமார் அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த கும்பல் மற்றொரு அறையில் தங்கியிருந்த பெண்கள் அறைக்குச் சென்று ரூபாய் 21- ஆயிரம், லேப்டாப் 2, செல்போன்கள், சிசிடிவி பாக்ஸ், ஆவணங்கள், கிரிடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்து அங்கிருந்து இரண்டு பெண்களையும் காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாருக்கும் அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு அறையில் தங்கியிருந்த கடத்தப்பட்ட பெண்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...