ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை கோரி ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு


ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

அதன்ஒரு பகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாட்டு வண்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது தாங்கள் கொண்டுவந்திருந்த சேவல்களையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். 

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு தடை விதித்து தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இந்த போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறிய அவ்வமைப்பினர், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட போட்டிகளை தடையை மீறி நடத்துவோம் என தெரிவித்தனர். 

இதையடுத்து மாட்டு வண்டிகளில் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் அந்த அமைப்பின் ஒரு பகுதியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...