ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை கோரி ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆட்சியரிடம் மனு


ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

அதன்ஒரு பகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாட்டு வண்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது தாங்கள் கொண்டுவந்திருந்த சேவல்களையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர். 

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு தடை விதித்து தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இந்த போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதியளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறிய அவ்வமைப்பினர், பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், சேவல்கட்டு உள்ளிட்ட போட்டிகளை தடையை மீறி நடத்துவோம் என தெரிவித்தனர். 

இதையடுத்து மாட்டு வண்டிகளில் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் அந்த அமைப்பின் ஒரு பகுதியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சேவல்களுடன் மாட்டு வண்டியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...