கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நிரம்பி வரும் கோதவாடி குளத்தை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோவை: நிரம்பி வரும் கோதவாடி குளத்தை இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் 152-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
30-ஆண்டுகளுக்குப் பிறகு கவுசிகா நதி அமைப்பு, கோதவாடிப் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் குளத்தைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.
தற்போது இந்த குளத்திற்கு செட்டிக்காபாளையம், வடசித்தூர் பிஏபி கால்வாயிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதாவாடி குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான கோதவாடி பகுதியில் 30-ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் தேங்கி நிற்பதைக் காண இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று நேரில் வந்து குளத்தைப் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

கோதவாடி குளத்தைப் பார்வையிட வந்த மயில்சாமி அண்ணாதுரை கௌசிகா நதி நீர் பாதுகாப்பு அமைப்பினர், கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் விவசாயிகள் என அனைவரும் வரவேற்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி பகுதியில் 152-ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
30-ஆண்டுகளுக்குப் பிறகு கவுசிகா நதி அமைப்பு, கோதவாடிப் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் குளத்தைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது.
தற்போது இந்த குளத்திற்கு செட்டிக்காபாளையம், வடசித்தூர் பிஏபி கால்வாயிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதாவாடி குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான கோதவாடி பகுதியில் 30-ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் தேங்கி நிற்பதைக் காண இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று நேரில் வந்து குளத்தைப் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
கோதவாடி குளத்தைப் பார்வையிட வந்த மயில்சாமி அண்ணாதுரை கௌசிகா நதி நீர் பாதுகாப்பு அமைப்பினர், கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் விவசாயிகள் என அனைவரும் வரவேற்றனர்.