திருப்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும் மாணவ-மாணவிகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் தலைமையாசிரியர் கழிவறைகளைச் சுத்தம் செய்யச் சொல்வதாகும், ஜாதி பெயரைச் சொல்லித் திட்டுவதாகவும் மாணவ-மாணவிகள் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் இடுவாய் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் 14-ஆசிரியர்களில் 12-பேர் நிரந்தர ஆசிரியராகவும், இரண்டு பேர் பகுதி நேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் கீதா என்பவர் கடந்த மூன்று வருடங்களாகத் தலைமையாசிரியராக இருந்து வருகிறார்.
தற்போது பள்ளியானது வாரத்திற்கு ஆறு நாட்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தலைமையாசிரியர் கீதா மாணவ-மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏளனமாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்க்கு சென்றுள்ளது. அது குறித்து விசாரணை செய்ய இன்று அவர் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மாணவ-மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் கீதா மாணவ மாணவிகளைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் மேலும் ஜாதியின் பெயரைச் சொல்லி கொச்சையான வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கண்ணீர் மல்கப் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்ட போது, காலையில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அறிக்கை தயார் ஆனதும் நடவடிக்கை குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
திருப்பூர் இடுவாய் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் 14-ஆசிரியர்களில் 12-பேர் நிரந்தர ஆசிரியராகவும், இரண்டு பேர் பகுதி நேர ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் கீதா என்பவர் கடந்த மூன்று வருடங்களாகத் தலைமையாசிரியராக இருந்து வருகிறார்.
தற்போது பள்ளியானது வாரத்திற்கு ஆறு நாட்கள் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தலைமையாசிரியர் கீதா மாணவ-மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏளனமாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்க்கு சென்றுள்ளது. அது குறித்து விசாரணை செய்ய இன்று அவர் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் மாணவ-மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் கீதா மாணவ மாணவிகளைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் மேலும் ஜாதியின் பெயரைச் சொல்லி கொச்சையான வார்த்தைகளைக் கொண்டு திட்டுவதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கண்ணீர் மல்கப் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்ட போது, காலையில் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அறிக்கை தயார் ஆனதும் நடவடிக்கை குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.