சிறுமியின் அப்பா, வாலிபரின் அப்பா, வாலிபர் என மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த பெற்றோர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வீராகுமார் (20). இவருக்கு கோவையைச் சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 16 வயது சிறுமிக்கு திருமண நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த நிலையில், திருமணம் நடைபெற இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தை திருமணம் நடைபெற்றதை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, சிறுமியின் அப்பா, வாலிபரின் அப்பா, வாலிபர் என மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வீராகுமார் (20). இவருக்கு கோவையைச் சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 16 வயது சிறுமிக்கு திருமண நடைபெறுவதாக சைல்டு லைனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த நிலையில், திருமணம் நடைபெற இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்ற சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தை திருமணம் நடைபெற்றதை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, சிறுமியின் அப்பா, வாலிபரின் அப்பா, வாலிபர் என மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டம் என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்த மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.