மூலப்பொருட்கள் விலை உயர்வால் 95-சதவீதம் சிறு-குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் இன்றி தவிப்பு..!

மூலப்பொருட்கள் விலை உயர்வால் 95-சதவீதம் சிறு-குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் இன்றி தவித்து வருவதால், 20-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மூலப்பொருட்கள் விலை உயர்வால் 95-சதவீதம் சிறு-குறு நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் இன்றி தவித்து வருவதால், 20-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டாக்ட்) சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வேலாண்டிபாளையத்தில் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரதாப்சேகர், பொருளாளர் லீலாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

பின்னர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-



தொழில்துறைக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களின் விலை கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக 100-சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டு உள்ளது. தொழில் துறையினர் கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரத் துவங்கியதும் கடுமையான மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டு உற்பத்தி சார்ந்த தொழில் துறையினர் 70-சதவீதத்திற்கும் கீழ் தங்கள் உற்பத்தியைக் குறைந்து கொண்டனர்.

உற்பத்தித் துறை சார்ந்து ஜாப் ஆடர்கள், உதிரிப்பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் தொழில் கூடங்கள் 95 சதவீதத்திற்கும் மேல் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆடர்கள் இழந்து செய்வது அறியாமல் தவித்து வருகின்றார்கள். இந்த குறுந்தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன், தனியார் கடன், இட வாடகை, தொழிலாளிகளின் சம்பளம் என எதுவும் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு தொழில் இழக்கும் நிலையில் உள்ளனர்.

நாட்டில் கிட்டதட்ட 40-கோடி பேர்களுக்கு மேல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் இந்த தொழில்களைப் பாதுகாக்கவும், மூலப்பொருள்களின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்தவும், விலை நிர்ணய கமிட்டிஅமைக்கவும் கோரி வரும் 20-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் தொழில் கூடங்கள் கதவடைக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

டாக்ட் சங்கமும் பங்கு எடுக்க உள்ளது. குறுந்தொழில்கள் நடத்தி வரும் அனைத்து தொழில் கூடங்களும் அன்றைய தினம் காலை 10-மணிக்குக் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தொழில் அமைப்புகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு எடுப்பது என முடிவு

செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...