பொள்ளாச்சி அருகே சாலை போடும் பணியை கிடப்பில் போட்ட நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

விரைவில் சாலை போடும் பணியை முடிக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே சாலை போடும் பணியை கிடப்பில் போட்ட நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகராட்சியின் 34வது வார்டு உட்பட்ட குறிஞ்சி நகர், லட்சுமி நகர், வடிவேல் கண்ணாபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஜல்லி கற்களை கொட்டி பரப்பிவிட்டதுடன் சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல், தொடர் மழை என அடுத்தடுத்த காரணங்களை மட்டுமே கூறிய நகராட்சி நிர்வாகம், சாலை போடும் பணியை தொடரவில்லை.



இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. வார்டு தலைவர் விவேக் தலைமை வகித்தார். நகரத் தலைவர் மணிகண்ட குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விரைவில் சாலை போடும் பணியை முடிக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தயாராக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...