அரசு பொதுமருத்துவமனை குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி புத்தாண்டை கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும மாணவர்கள்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்திலும், அரசு பொது மருத்துவமனையிலும் நடத்தியது.



கோவைபுதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புத்தாண்டு நிகழ்ச்சியினை வெறும் சிறப்பு சொற்பொழிவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மட்டும் இல்லாமல், வருகின்ற வருடத்தில் மாணவர்களின் தொழில், வேலை வாய்ப்பு, வாழ்க்கை திறன்களை பாடத்திட்டத்துடன் வகுப்பு நேரங்களில் செயல்படுத்த இதன் ஆசிரியர்கள் உறுதிமொழியெடுத்தனர்.



இதைத்தொடர்ந்து, கோவை குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையின் மாணவர்கள் கடந்த எட்டு வருடங்களாக தாங்களே வடிவமைத்த ஆடைகள் மற்றும் துண்டுகளை கோவை அரசு பொது மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு மற்றும் அதற்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கி புத்தாண்டை கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதல்வர் ஏ.இரமேஷ், பாபா ஞானகுமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...