கோவை மாவட்டத்தில் நாளை 15வது மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌..!

கிராமப்புறங்களில்‌ 601 முகாம்களும், மாநகராட்சிப் பகுதிகளில்‌ 249 முகாம்கள் என மொத்தம்‌ 850 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளை 15-வது மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌ நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்‌ கோவிட்‌-19 தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோயமுத்தூர்‌ மாவட்டத்தில்‌ 18 வயதிற்கு மேற்பட்ட 26.11 லட்சம்‌ நபர்களுக்கு முதல்‌ தவணையும்‌, 19.34 லட்சம்‌ நபர்களுக்கு இரண்டாம்‌ தவணையும்‌ கோவிட்‌-18 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில்‌ 18 வயதிற்கு மேற்பட்ட 93.6 சதவீதம்‌ பேருக்கு முதல்‌ தவணை தடுப்பூசியும்‌ 68 சதவீதம்‌ பேருக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசிகளும்‌ செலுத்தப்பட்டுள்ளன. டிசம்பர்‌ மாதத்திற்குள்‌ 100 சதவீதம்‌ பேருக்கு தடுப்பூசி வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின்‌ உத்தரவிற்கிணங்க, மெகா தடுப்பூசி முகாம்கள்‌ கோவை மாவட்டத்தில்‌ 12.09.2021 அன்று தொடங்கி இதுவரை 14 மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்கள்‌ நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்‌ 128 லட்சம்‌ பேருக்கு கோவிட்‌-19 தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் நாளை (18.12.2021) சனிக்கிழமை அன்று 15-வது மெகா கோவிட்‌ தடுப்பூசி முகாம்‌ நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான விரிவான ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில்‌ 601 முகாம்களும்‌ மாநகராட்சிப் பகுதிகளில்‌ 249 முகாம்கள்‌ மொத்தம்‌ 850 தடுப்பூசி மையங்கள்‌ நிறுவப்பட்டுள்ளன. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொது மக்கள்‌ அனைவரும்‌ இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இரண்டாம்‌ தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால்‌ மட்டுமே உருமாறி கொண்டிருக்கும்‌ வைரசுக்கு எதிரான நோய்‌ எதிர்ப்பாற்றல்‌ முழுமையாக உருவாகும்‌. தற்சமயம்‌ ஒமைக்ரான்‌ என்னும்‌ உருமாறிய கொரோனா பரவி வரும்‌ சூழலில்‌ வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள்‌ தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நோய்த்தொற்று பரவும்‌ அபாயம்‌ இருப்பதால்‌, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம்‌ 71(1)-ன்படி, சந்தைப்‌ பகுதிகள்‌, பேரங்காடிகள்‌, திரையரங்குகள்‌ மற்றும்‌ பிற பொழுதுபோக்கு இடங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌, விளையாட்டு திடல்கள்‌, உணவகங்கள்‌, ஆகிய இடங்களில்‌ அதனுடைய உரிமையாளர்கள்‌ வாடிக்கையாளர்களின்‌ இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க ஒன்றியங்கள்‌ தோறும்‌ கண்காணிப்பு அலுவலர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

எனவே, பொது மக்கள்‌ தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்படி முகாம்களில்‌ தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...