கோவை மத்திய மண்டலம் ராமநாதபுரம் 80 அடி சாலையை அடுத்த ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு.
கோவை: கோவையில் ரூ.1.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை மத்திய மண்டலம் ராமநாதபுரம் 80 அடி சாலையை அடுத்த ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அங்கு தகர ஷெட் அமைத்து, பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து, நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஒரு வார காலத்திற்குள் காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பு செய்திருந்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததை தொடர்ந்து, நகரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை இன்று மீட்டனர்.

உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் ஜெயின் ராஜ், ராமநாதபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த பத்து வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த 4 சென்ட் இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி ஆகும். விரைவில், மீட்கப்பட்ட இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும்.’’ என்றார்.
கோவை மத்திய மண்டலம் ராமநாதபுரம் 80 அடி சாலையை அடுத்த ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அங்கு தகர ஷெட் அமைத்து, பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து, நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை ஒரு வார காலத்திற்குள் காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பு செய்திருந்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததை தொடர்ந்து, நகரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை இன்று மீட்டனர்.
உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் ஜெயின் ராஜ், ராமநாதபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த பத்து வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த 4 சென்ட் இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி ஆகும். விரைவில், மீட்கப்பட்ட இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும்.’’ என்றார்.