கோவையில் தனியார் கட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை அரசு கட்டடங்களுக்கு மாற்ற திட்டம்..?

அரசு கட்டடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சேதமடைந்துள்ள கட்டடங்கள் ஏதேனும் உள்ளதா? என கண்டறியப்பட்டு அந்த கட்டடத்தை புதுபிக்க அல்லது புது கட்டடம் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 14 மற்றும் மாநகராட்சியில் 4 என சேர்த்து மொத்தம் 18 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, இதன் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர்.



அங்கன்வாடி மையங்களில் அடிப்படைக் கல்வி, விளையாட்டு, சமச்சீரான உணவு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 177 அங்கன்வாடி மையங்கள் தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகின்றன. இதனிடையே, தனியார் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களை அரசின் சொந்த கட்டடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.



மேலும், அரசு கட்டடத்தில் ஏற்கனவே இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சேதமடைந்துள்ள கட்டடங்கள் ஏதேனும் உள்ளதா? என கண்டறியப்பட்டு அந்த கட்டடத்தையும் புதுபிக்க அல்லது புது கட்டடம் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

"தனியார் கட்டடங்களில் இடநெருக்கடி உள்ளது. மேலும், வாடகையும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அரசு கட்டடங்களில் உள்ள சில அங்கன்வாடி மையங்கள் பழைய கட்டடங்களில் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை அரசு கட்டடங்களுக்கு மாற்றவும், பழைய கட்டடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களை புதுபித்து அல்லது புதிய கட்டடங்கள் கட்டவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்,’’ என்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...