மேலும், சாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோவை: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சாதி ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வயது வந்தோர் தனது திருமணத்திற்கான இணையை தானே தேர்வு செய்து கொள்ள சட்டம் அனுமதி அளித்துள்ள போதிலும், அதை ஏற்காமல் சாதிய ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன.
சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க, சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். அதன் மூலமே, அத்தகைய கொலைகளை தடுக்கவும், அவ்வறான கொலைகள் நடைபெறும் போது உடனடியாக வழக்குப் பதிவு, துரிதமான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை வேகமாக முடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி பெற முடியும்.
அதுபோலவே, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் உடனடியாக பிணையில் வெளிவரும் சூழல் தமிழகத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படும் போது விரைவாக விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இளைஞர்- இளம்பெண்களை குறி வைத்து இந்த விற்பனை உள்ளது. அதை உடனே தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காலை, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின் குமார் தலைமை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் M.விவேகானந்தன், S.பாரதி, V சந்திரசேகரன், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வயது வந்தோர் தனது திருமணத்திற்கான இணையை தானே தேர்வு செய்து கொள்ள சட்டம் அனுமதி அளித்துள்ள போதிலும், அதை ஏற்காமல் சாதிய ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன.
சாதிய ஆணவக் கொலைகளை தடுக்க, சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். அதன் மூலமே, அத்தகைய கொலைகளை தடுக்கவும், அவ்வறான கொலைகள் நடைபெறும் போது உடனடியாக வழக்குப் பதிவு, துரிதமான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை வேகமாக முடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக நீதி பெற முடியும்.
அதுபோலவே, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் உடனடியாக பிணையில் வெளிவரும் சூழல் தமிழகத்தில் உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படும் போது விரைவாக விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இளைஞர்- இளம்பெண்களை குறி வைத்து இந்த விற்பனை உள்ளது. அதை உடனே தடுத்திட உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காலை, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின் குமார் தலைமை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் M.விவேகானந்தன், S.பாரதி, V சந்திரசேகரன், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.