மேலும், பதிவு செய்துள்ள தன்னார்வலர்களின் முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 6,471 தன்னாா்வலா்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கு 6,471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்று ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தவுள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு ராஜவீதி, துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதனை தொடங்கிவைத்து ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் கூறியதாவது:
கொரோனா பொது முடக்கத்தால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு சாா்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை மாணவா்களின் இல்லங்களுக்கே சென்று பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 2,089 பகுதிகளில் 1 லட்சத்து 64 ஆயிரம் மாணவா்கள் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனா். இவா்களுக்கு பாடம் நடத்த 8 ஆயிரத்து 200 தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது வரை 6 ஆயிரத்து 471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனா்.
இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த மாவட்டம், ஒன்றிய அளவிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இல்லம் தேடிக்கல்வி செல்ஃபோன் ஆப் மூலம் தன்னார்வலர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். பதிவு செய்துள்ள தன்னார்வலர்களின் முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என். கீதா, மாவட்ட கல்வி அலுவலர் (பேரூா்) ஏ.எம். பழனிசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி ஒருங்கிணைப்பாளர் கே. லெனின்பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கு 6,471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என்று ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் நடத்தவுள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு ராஜவீதி, துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதனை தொடங்கிவைத்து ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் கூறியதாவது:
கொரோனா பொது முடக்கத்தால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு சாா்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினமும் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை மாணவா்களின் இல்லங்களுக்கே சென்று பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 2,089 பகுதிகளில் 1 லட்சத்து 64 ஆயிரம் மாணவா்கள் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனா். இவா்களுக்கு பாடம் நடத்த 8 ஆயிரத்து 200 தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது வரை 6 ஆயிரத்து 471 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனா்.
இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த மாவட்டம், ஒன்றிய அளவிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இல்லம் தேடிக்கல்வி செல்ஃபோன் ஆப் மூலம் தன்னார்வலர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். பதிவு செய்துள்ள தன்னார்வலர்களின் முழுமையான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் என். கீதா, மாவட்ட கல்வி அலுவலர் (பேரூா்) ஏ.எம். பழனிசாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி ஒருங்கிணைப்பாளர் கே. லெனின்பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.