குறிப்பாக, குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சேரன் மாநகர், விளாங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் டெங்கு கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவ முகாம் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

முன்னதாக, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குழுக்களாகப் பிரிந்து சென்று டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சேரன் மாநகர், விளாங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சார்பில் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் டெங்கு கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவ முகாம் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
முன்னதாக, பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குழுக்களாகப் பிரிந்து சென்று டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.