வனப்பகுதிக்குள் தாவி வேகமாகச் சென்ற சிறுத்தை கிளை மானை வேட்டையாடி சாலையின் மறுபக்கத்தில் இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை: கோவை வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று கிளை மானை வேட்டையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் சாலையோரம் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் புது தோட்டம் பகுதியில் இரவு நேரத்தில், வால்பாறையைச் சேர்ந்த ஒருவர் வனப்பகுதி அருகில் சாலையோரம் சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்து செல்போனில் படம் பிடித்துள்ளார்.
நீண்ட நேரமாக சிறுத்தை வனப்பகுதியை ஒட்டிய சாலையில் அமர்ந்து வனப்பகுதிக்குள் பார்த்துக் கொண்டிருந்தது.

திடீரென்று, சிறுத்தை வனப்பகுதிக்குள் தாவி வேகமாகச் சென்று வனப்பகுதிக்குள் நின்றிருந்த கிளை மானை வேட்டையாடி சாலையின் மறுபக்கத்தில் இழுத்துச் சென்றதை வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்து உள்ளார்.
இந்த நிகழ்வு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும், இரவு நேரங்களில் சாலையோரம் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையில் புது தோட்டம் பகுதியில் இரவு நேரத்தில், வால்பாறையைச் சேர்ந்த ஒருவர் வனப்பகுதி அருகில் சாலையோரம் சிறுத்தை ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்து செல்போனில் படம் பிடித்துள்ளார்.
நீண்ட நேரமாக சிறுத்தை வனப்பகுதியை ஒட்டிய சாலையில் அமர்ந்து வனப்பகுதிக்குள் பார்த்துக் கொண்டிருந்தது.
திடீரென்று, சிறுத்தை வனப்பகுதிக்குள் தாவி வேகமாகச் சென்று வனப்பகுதிக்குள் நின்றிருந்த கிளை மானை வேட்டையாடி சாலையின் மறுபக்கத்தில் இழுத்துச் சென்றதை வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்து உள்ளார்.
இந்த நிகழ்வு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.