கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை உரிமையாளர் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் ரோடு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை ஆர்.எஸ். புரம் அருகே உள்ள லோக்மான்ய வீதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் வயது 28. இவர் அந்தப் பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி இவர் தான் செய்த 45 பவுன் தங்க நகைகளை பாலிஷ் போடுவதற்காக, டி.கே வீதியில் உள்ள பட்டறை வைத்து நடத்தி வந்த சவரப் ஜோக்ஸ் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, நகை கொடுத்து, நீண்ட நாட்களாகியும் பாலிஷ் போட்டுக் கொடுக்காததால், சந்தேகமடைந்த சதிஷ் குமார், சவரப் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால், மேலும் சந்தேகமடைந்த சதிஷ், பாலிஷ் போடும் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது, அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உரிமையாளர் கடையை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சதிஷ் குமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து 45 பவுன் தங்க நகைகளுடன் மாயமான நகை பட்டறை உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி இவர் தான் செய்த 45 பவுன் தங்க நகைகளை பாலிஷ் போடுவதற்காக, டி.கே வீதியில் உள்ள பட்டறை வைத்து நடத்தி வந்த சவரப் ஜோக்ஸ் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, நகை கொடுத்து, நீண்ட நாட்களாகியும் பாலிஷ் போட்டுக் கொடுக்காததால், சந்தேகமடைந்த சதிஷ் குமார், சவரப் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால், மேலும் சந்தேகமடைந்த சதிஷ், பாலிஷ் போடும் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது, அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உரிமையாளர் கடையை காலி செய்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சதிஷ் குமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து 45 பவுன் தங்க நகைகளுடன் மாயமான நகை பட்டறை உரிமையாளரை தேடி வருகின்றனர்.