கோவையில் கல்வி வளாகங்களில் மத அடிப்படையிலான பயிற்சிக்கு தடை விதிக்க கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வினர் மனு

தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள RSS பயிற்சி வகுப்பிற்கு மற்றும் மத பயிற்சிக்களுக்கு அனுமதி வழங்கும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.


கோவை: கல்வி வளாகங்களுக்குள் மத சார்ந்த பயிற்சியை அளிக்க கூடாது எனவும் அவ்வாறு பயிற்சி அளிக்க உதவி புரியும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் "கடந்த சில தினங்களாக கோவையில் மதவெறியை மாணவர்களிடையே உண்டாக்கும் விதமாக கல்வி வளாகங்களிலேயே பயிற்சி வகுப்புகளை RSS அமைப்புகள் செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தனர். இதற்கு, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் எவ்வாறு அனுமதியளிக்கிறது?" என்ற கேள்வியை எழுப்பி இருந்தனர்.

மேலும், தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள RSS பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதிக்க வேண்டும் எனவும் இது போன்ற மத பயிற்சிக்களுக்கு அனுமதி வழங்கும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் மாணவர்களையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தை தங்கள் அமைப்பு முன்னெடுக்கும் என குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...