கோவையில் காய்ச்சலுடன் வந்தால் கொரோனா, டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டம்..!

மேலும், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனுடன் சேர்த்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனிடையே, மாவட்டத்தில் சுமார் 27 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள சுகாதார துறையினருக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் கொரோனா பணிகளுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்த அரசு துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனா‌ல் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா மட்டுமின்றி டெங்கு பாதிப்பும் உள்ளதா? என்பது கண்டறியப்படும். மேலும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீட்டு மாடிகளிலும், வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், குடிநீர் டிரம்கள் போன்றவற்றை அடிக்கடி சுத்தப்படுத்தி மூடி வைத்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...