கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை தாக்கி 4.5 பவுன் நகை பறிப்பு..!!

இது குறித்து சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சித்தாபுதூர் ஆவாரம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (82) ஓய்வுபெற்ற வங்கி ஊழியா். இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் கதவை யாரோ தட்டியுள்ளனா். இதையடுத்து, அவா் வெளியே வந்து பாா்த்தபோது அங்கிருந்த நபா் சொக்கலிங்கத்தை கீழே தள்ளிவிட்டு அவரைத் தாக்கி, அவர் அணிந்திருந்த நான்கரை பவுன் நகையைப் பறித்துச் சென்றார்.

பின்னர், சொக்கலிங்கத்தின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். அதற்குள்ளாக அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து சொக்கலிங்கம் அளித்த புகாரின் பேரில் காட்டூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...