கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுப் பொருட்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டில் உள்ள பீரோ, மேசை, பாத்திரங்களுடன் வந்து வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுப் பொருள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மருதமலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி - லட்சுமி தம்பதியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வீட்டில் உள்ள பீரோ, மேசை, பாத்திரங்களுடன் வந்து வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



கருப்பு சாமியின் அண்ணன் தங்களை வாழவிடாமல் இடையூறு செய்ததாகவும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி குடிசையை எரித்து விட்டதாகவும் இதனால் தங்களின் ஆதார் கார்டு போன்ற அடையாள அட்டைகள் பாழாகிவிட்டதாகவும் கூறி கண்ணீர் விட்டனர்.



குறிப்பாக, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்களுக்கு ஒரு தீர்வு தர வேண்டும் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.



பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அந்த மினிடோர் வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...