கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்!

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி வைத்து, மாதம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொது ஒப்பந்த மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவையில் உடையாம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மில் ஒன்றில் வடமாநில பெண் ஒருவரை விடுதியின் காப்பாளர் மற்றும் மில்லின் மேலாளர் தாக்கும் வீடியோ கடந்த ஐந்தாம் தேதி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்தும் மேலும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை மாவட்ட பொது ஒப்பந்தம் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

CITU மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,

1. கோவையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் காப்பதற்காக 1971, 1981 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

2. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் புகார் பெட்டி வைத்து மாதம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.

3. தொழிலாளர் நல சட்டங்களை அமல் ஆக்குவதற்கு தொழிற்சாலைகளை ஆய்வு செய்திட வேண்டும்.

4. தொழிலாளர்கள் தங்கும் இடங்களை தரமான குடியிருப்புகளாக மாற்ற வேண்டும்.

5. கேரளாவைப் போல் வடமாநில தொழிலாளர்கள் விருந்தினர் தொழிலாளி என தமிழக அரசு அழைத்திட வேண்டும்.

உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...