பொள்ளாச்சி அருகே ஆனைமலை டாப்ஸ்லிப்பில் இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி..!

பயிற்சிக்கு சென்ற இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு கரியஞ்சோலை பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: இமாச்சல பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, இங்குள்ள வனப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் பயிற்சிக்காக வருவதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள வனச்சரக அலுவலர்கள் 41 பேர் பயிற்சிக்காக சென்றனர். அங்கு சென்ற வனத்துறை அலுவலர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக, உதவி வனப்பாதுகாவலர் செல்வம் மற்றும் பயாலிஸ்ட் பீட்டர் ஆகியோர் பசுமை காடுகளை பராமரிப்பது, வனவிலங்குகளை கண்காணிப்பது, போன்ற பயிற்சிகளை வழங்கினார்.

மேலும், பயிற்சிக்கு சென்ற இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு கரியஞ்சோலை பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் சூழல் சுற்றுலா, மூலிகை வனம், கோழிகமுத்தி யானைகள் முகாம், டாப்சிலிப்பில் உள்ள உண்டு உறைவிட பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வளர்ப்பு யானைகளை பராமரிப்பு முறை குறித்தும், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...