அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் உறவினர் வீடுகளில் என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.

கோவை உட்பட வேலூர், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் 69 இடங்களில் காலைதொடங்கினார். மனைவி மகன் மீது வழக்குப் பதிவு.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் இன்று காலை 6.30 மணி அளவில் தமிழகத்தில் உள்ள 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கி உள்ளனர். 

தமிழகத்தில்அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவருடைய மனைவி சாந்தி, மகன் தரணிதரன், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவர் 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் இந்த ரெய்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதைத் தொடர்ந்து, இன்று காலை 6.30 மணி அளவில், நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை உட்பட வேலூர், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், ரெய்டு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் விஜயபாஸ்கர், வேலுமணியை தொடர்ந்து தங்கமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...