இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கோவையில் கடந்த 10ம் தேதி மாயமானவர் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள காட்டூர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (52) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 10ம் தேதி இவர் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மேலும், அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாப்பநாயக்கன் பாளையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அதில் கார்த்திகேயன் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள காட்டூர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (52) ஆட்டோ ஓட்டுநர். கடந்த 10ம் தேதி இவர் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மேலும், அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாப்பநாயக்கன் பாளையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அதில் கார்த்திகேயன் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பின்னர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.