காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு வீடுகளை 3 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக, வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் நுழைந்த அங்கு உள்ள ராஜன், பிரேமா, சின்னு, திலகம் ஆகியோர் வீடுகளை காட்டுயானைகள் சுவரை இடித்து, உள்ளிருந்த பொருட்களை கட்டில், டிவி, சமையல் பொருட்கள் போன்றவைகளை சேதப்படுத்தியது.

இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்டினர். இதனிடையே, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக, வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் அப்பகுதி குடியிருப்பு பகுதியில் நுழைந்த அங்கு உள்ள ராஜன், பிரேமா, சின்னு, திலகம் ஆகியோர் வீடுகளை காட்டுயானைகள் சுவரை இடித்து, உள்ளிருந்த பொருட்களை கட்டில், டிவி, சமையல் பொருட்கள் போன்றவைகளை சேதப்படுத்தியது.
இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்டினர். இதனிடையே, காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்க வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.