திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபர் கைது - 100 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..!

மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பனியன் மற்றும் மில்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு நகரை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் வசித்து வருபவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட், குட்கா பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் வருவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் அருகே ஊத்துக்குளி காவல் நிலைய பகுதியில், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு சென்ற உதவி ஆய்வாளர் தவசியப்பன் தலைமையிலான போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சிட்கோ எதிரில் செயல்பட்டு ஈஸ்வரி மளிகை கடையில் 7,616 பாக்கெட் குட்காவும், கஞ்சா கலந்த சாக்லெட் 6,640 பாக்கெட்டும் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, கடையின் உரிமையாளர் சொக்கலிங்கம்(55) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.



இதே போல், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பெருமாநல்லூர் அருகே கஞ்சா சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ச்சியாக திருப்பூர் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...