கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்: வெள்ளலூர் பகுதியில் தார் சாலை போடும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

கோவை வெள்ளலூர் பேரூராட்சி, ஆலயம் அவென்யூ, மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் இன்று துவக்கப்பட்டது.


கோவை: ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டதின் படி, தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தல், குப்பைகள் உருவாகும் நிலையிலேயே 100 சதவீத பிரித்தலை உறுதி செய்து, குப்பை இல்லா நகரங்களை உருவாக்குவது, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்துதல், நீர்நிலைகள் மீட்டெடுப்பது, பூங்காக்கள் அமைப்பது, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதி, மரம் நடுதல், பள்ளிக் கட்டிடங்கள், மருந்தகங்கள், நூலகங்கள் மேம்படுத்துவதற்கு என பல்வேறு மக்களுக்கு தேவையான திட்டங்கள், அதில் அடங்கும்

அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில் கோவை வெள்ளலூர் பேரூராட்சி, ஆலயம் அவென்யூ, மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் இன்று துவக்கப்பட்டது.

திட்டத்தை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரக் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...