மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித்தொகை ரூபாய் 1000 என்பதை மாற்றி 3000 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்: உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித்தொகை ரூபாய் 1000 என்பதை மாற்றி 3000 ரூபாய் வழங்கிட வேண்டும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவரும் உதவித்தொகை ரூபாய் 1500 என்பதை மாற்றி 5000 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித்தொகை ரூபாய் 1000 என்பதை மாற்றி 3000 ரூபாய் வழங்கிட வேண்டும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவரும் உதவித்தொகை ரூபாய் 1500 என்பதை மாற்றி 5000 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.