கோவையில் ரூ. 41 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள்..!

தமிழக முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து காணொளி வாயிலாக இந்த நிகழ்வினை துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் 41 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



தமிழக முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து காணொளி வாயிலாக இன்று 5 மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் பெறுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார். அந்த 5 மாவட்டங்களில் கோவை மாவட்டமும் ஒன்றாகும்.

இந்நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. 



முதல்வர் அங்கு நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கோவையில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தில் உள்ள 1068 சுய உதவிக் குழுக்களுக்கு 41.31 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மற்றும் நலத்திட்டம் வழங்கப்பட்டது. இதில் 12,816 உறுப்பினர்கள் கலந்து கொண்டு உதவிகளை பெற்றுக்கொண்டனர்.



கலையரங்க நுழைவாயிலில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், சிற்றுண்டிகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 



அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...