நாளை முதல் ஏடிஎம்களில் ரூ.4500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதனால் வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

மக்களின் பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், நவம்பர் 10-ஆம் தேதி முதல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் என்றும் அவர் அறிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் காலக்கெடு நேற்றுடன் (டிச. 30) முடிவடைந்தது.

இந்நிலையில், நாளை முதல் (2017 ஜன. 1) ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் 4500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட சில வங்கி பயனாளர்கள் 2500 ரூபாய் வரை ஏடிஎம் மையத்தில் நாள் ஒன்றுக்கு எடுக்கலாம் என இருந்த உச்சவரம்பு தற்போது 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாராந்திர பணம் எடுக்கும் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...