முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர். நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: சபரிமலை சிறப்பு ரயில், திருப்பூரில் நிற்காது என்ற அறிவிப்பு, ஐயப்ப பக்தர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
தெற்கு, மத்திய ரயில்வே இணைந்து சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்டது.
செகந்திரபாத் - கொல்லம் இடையே ஒன்று, கச்சிக்குடா - கொல்லம் இடையே இரு ரயில்கள் வரும், 17, 19 மற்றும், 20-ம் தேதி முதல் இயங்கப்படுகிறது. மூன்று ரயில்களும் தெலுங்கானா மாநிலத்தில் புறப்பட்டு, காட்பாடி வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது.
சேலம், ஈரோட்டில் நின்று, கோவை வழியாக பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயத்தைக் கடந்து கொல்லம் செல்கிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவுக்கு சென்ற பக்தர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
3-ரயில்களும் ஈரோட்டில் புறப்பட்டு நேராக, கோவை சென்று சேரும்; திருப்பூரில் 3 ரயில்கள் நிறுத்தம் கிடையாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிலர் கூறுகையில், 'முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.
நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றனர்.
தெற்கு, மத்திய ரயில்வே இணைந்து சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்டது.
செகந்திரபாத் - கொல்லம் இடையே ஒன்று, கச்சிக்குடா - கொல்லம் இடையே இரு ரயில்கள் வரும், 17, 19 மற்றும், 20-ம் தேதி முதல் இயங்கப்படுகிறது. மூன்று ரயில்களும் தெலுங்கானா மாநிலத்தில் புறப்பட்டு, காட்பாடி வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது.
சேலம், ஈரோட்டில் நின்று, கோவை வழியாக பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயத்தைக் கடந்து கொல்லம் செல்கிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவுக்கு சென்ற பக்தர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
3-ரயில்களும் ஈரோட்டில் புறப்பட்டு நேராக, கோவை சென்று சேரும்; திருப்பூரில் 3 ரயில்கள் நிறுத்தம் கிடையாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சிலர் கூறுகையில், 'முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.
நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றனர்.