கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவர் கைது

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், மேற்படி புகையிலை பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையாகக் கோவை மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்துத் தேடிவந்த நிலையில் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர்கள் மதிவண்ணன், குப்புராஜ் மற்றும் தலைமைக் காவலர் ரவி(HC-576)வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலை பொருட்களான பான்மசாலா, குட்கா, போன்றவற்றைக் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காகப் புகையிலை பொருட்களை எடுத்து வந்த மதுக்கரை சீராபாளையம் புதூர், சிலம்பரம் என்பவரது மகன் திருபுகழ் (வயது-38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 22 கிலோகிராம் எடையுள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல், கோட்டூர் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் காலேப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி விரைந்து சென்று கோட்டூர் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை ஒரு பையில் வைத்து விற்பனை செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த, திருநீலகண்டர் தெரு, முகமது இக்பால் என்பவரது மகன் முகம்மது அப்பாஸ் (வயது-27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 1000/- பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது புகார் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...