கிணத்துக்கடவு சென்றாம்பாளையத்தில் கட்டிடத் தொழிலாளியைப் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கிணத்துக்கடவு சென்றாம்பாளையத்தில் கட்டிடத் தொழிலாளியைப் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(57). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று மாலை சென்றாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நாகராஜை ஒருமையில் பேசி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாகராஜ் இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து நாகராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த சென்றாம்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் நித்தியானந்தகுமார்(34) என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(57). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று மாலை சென்றாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நாகராஜை ஒருமையில் பேசி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாகராஜ் இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து நாகராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த சென்றாம்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் நித்தியானந்தகுமார்(34) என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.