மதுக்கரை அருகே 30 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 700 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்ற வழக்கில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர்.
ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வேலந்தாவளம், குமிட்டிபதி, வழுக்கல் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக அதிகாலை 3 மணியளவில் வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றது.
இதையடுத்து, அதிகாரிகள் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் 30 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 700 கிலோ ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் திருமுறை நகரைச் சேர்ந்த பீட்டர் (56), பிச்சனூர் அருகே உள்ள ரெங்க சமுத்திரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (48) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், ஆட்டோவில் 700 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வேலந்தாவளம், குமிட்டிபதி, வழுக்கல் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக அதிகாலை 3 மணியளவில் வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றது.
இதையடுத்து, அதிகாரிகள் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் 30 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 700 கிலோ ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் திருமுறை நகரைச் சேர்ந்த பீட்டர் (56), பிச்சனூர் அருகே உள்ள ரெங்க சமுத்திரத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (48) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், ஆட்டோவில் 700 கிலோ ரேசன் அரிசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரையும் மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.