உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் தனிமனிதரின் எதிர்ப்பால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் சிரமப்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அங்காளம்மன் நகர் பெருந்தொழுவு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு சிலர் மின் கம்பங்கள் நடப்படும் இடம் தங்களின் சொந்த இடம் என கூறியதால் மின் கம்பம் நடும் பணி நிறுத்தப்பட்டது.
முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அளிக்கப்பட்டு மாற்று வழியில் மின் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்த பிறகே 10 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது அதில் ஒரு சிலர் அவர்களின் சொந்த இடத்தில் அமைத்தனர்.
இதனிடையே, தனி மனிதர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மின் இணைப்பு கிடைக்காமல் போனது.

இதனால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இன்றி தவித்து வருவதாகவும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அங்காளம்மன் நகர் பெருந்தொழுவு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு சிலர் மின் கம்பங்கள் நடப்படும் இடம் தங்களின் சொந்த இடம் என கூறியதால் மின் கம்பம் நடும் பணி நிறுத்தப்பட்டது.
முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அளிக்கப்பட்டு மாற்று வழியில் மின் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்த பிறகே 10 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது அதில் ஒரு சிலர் அவர்களின் சொந்த இடத்தில் அமைத்தனர்.
இதனிடையே, தனி மனிதர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய மின் இணைப்பு கிடைக்காமல் போனது.
இதனால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இன்றி தவித்து வருவதாகவும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.