தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றால் ஒரே தவணையில் 1 லட்சத்து 900 ரூபாய் கட்ட வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் கஜலட்சுமி ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஜலட்சுமி திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் ஏராளமான குடும்பத்தினர் பினாயில் மற்றும் தொடப்பம் உள்ளிட்டவை வியாபாரம் செய்து அங்கேயே தங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலிபாளையம் பகுதியில் வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் அவ்விடத்தில் ஏற்கனவே பலருக்கு பட்டா வழங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 2019ம் ஆண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக 10 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக ஏற்கனவே இவர்கள் செலுத்தியுள்ள நிலையில், தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றால் ஒரே தவணையில் 1 லட்சத்து 900 ரூபாய் கட்ட வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் சிறிது சிறிதாக செலுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது கூட வீடு ஒதுக்கீடு செய்த உடன் மாத தவணையை செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒரே தவணையாக செலுத்த வற்புறுத்துவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கஜலட்சுமி திரையரங்கம் அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் ஏராளமான குடும்பத்தினர் பினாயில் மற்றும் தொடப்பம் உள்ளிட்டவை வியாபாரம் செய்து அங்கேயே தங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலிபாளையம் பகுதியில் வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் அவ்விடத்தில் ஏற்கனவே பலருக்கு பட்டா வழங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 2019ம் ஆண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக 10 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக ஏற்கனவே இவர்கள் செலுத்தியுள்ள நிலையில், தற்போது வீடு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றால் ஒரே தவணையில் 1 லட்சத்து 900 ரூபாய் கட்ட வேண்டும் என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் சிறிது சிறிதாக செலுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது கூட வீடு ஒதுக்கீடு செய்த உடன் மாத தவணையை செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒரே தவணையாக செலுத்த வற்புறுத்துவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.