கோவையில் 99 சதவீத மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி - கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் தகவல்..!

தற்போது விடுபட்ட 2,400 மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடப்பதாகவும் இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 99 சதவீதம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

கொரோனா பாதிப்பின் காரணமாக, தடுப்பூசி போடும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த அக்டோபர் 27-ம் தேதி துவங்கியது. இந்த தடுப்பூசி முகாமின் மூலம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 800 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 21 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதையடுத்து, தற்போது விடுபட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் பெருமாள் சாமி கூறும் போது:-

கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 800 மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், தற்போது வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 400 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதாவது, 99 சதவீத மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, தற்போது விடுபட்ட 2,400 மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்'' என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...