இந்த விபத்தில் அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. மேலும், 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கோவை: கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வரதராஜுலு (40). இவர் சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவர். இந்நிலையில், நேற்று கோவை அவிநாசி ரோடு பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி அவருடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சின்னியம்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் சாலையோரமாக நின்றிருந்த வாலிபர் மீது மோதி அங்கு இருந்த மோட்டார் சைக்கிள், சாலையோரமாக நின்றவர்கள் மீது மோதி கடைக்குள் புகுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலியானார். அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இதில் 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசாரின் விசாரணையில் கார் மோதி இறந்த வாலிபர் வெள்ளணைபட்டி ட்ரான்ஸ்போர்ட் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் கலையரசன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த வரதராஜிலு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வரதராஜுலு (40). இவர் சின்னியம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவர். இந்நிலையில், நேற்று கோவை அவிநாசி ரோடு பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி அவருடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சின்னியம்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் சாலையோரமாக நின்றிருந்த வாலிபர் மீது மோதி அங்கு இருந்த மோட்டார் சைக்கிள், சாலையோரமாக நின்றவர்கள் மீது மோதி கடைக்குள் புகுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலியானார். அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இதில் 3க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசாரின் விசாரணையில் கார் மோதி இறந்த வாலிபர் வெள்ளணைபட்டி ட்ரான்ஸ்போர்ட் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் கலையரசன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த வரதராஜிலு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.