திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள்..!

இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாநில அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் கலந்துகொள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்ய தகுதி போட்டிகள் நடைபெற்றது.

அரியலூரில் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாடு சீனியர்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியும், 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஜூனியர மற்றும் யூத்களுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி சிவகாசியிலும் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்ள தகுதியான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யும் வகையில் திருப்பூர் மாவட்ட கேரம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது.



இதில் சீனியர் ஜூனியர் யூத் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் உட்பட 135 பேர் இதில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்குவதோடு மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என திருப்பூர் மாவட்ட கேரம் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...