கடந்த வாரம் கிலோ ஒரு ரூ. 700க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் பருவமழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து, விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், கோவை பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட மல்லிகை 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் கிலோ ஒரு ரூ. 700க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
இதேபோல், கடந்த வாரம் ரூ.600-க்கு விற்ற முல்லை, நேற்று ரூ.1600க்கு விற்பனையானது. மேலும், கோழிக்கொண்டை கிலோ ரூ.200, ஜாதி முல்லை ரூ.1000, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.200 செவ்வந்தி (வெள்ளை), ரூ.320, செண்டுமல்லி ரூ.280, 15 பூக்கள் கொண்ட ரோஸ் கட்டு 200, ஒரு தாமரைப்பூ ரூ.25-க்கும் விற்பனையானது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில்,"தொடர் மழை காரணமாக வழக்கத்தை விட பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் இன்று இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் மேலும் விலை அதிகரிக்கலாம். அடுத்த மாதம் பூக்கள் விலை குறைந்து விடும்'' என்று தெரிவித்தார்.
கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து, விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், கோவை பூ மார்க்கெட்டில் தற்போது பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை விட மல்லிகை 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் கிலோ ஒரு ரூ. 700க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
இதேபோல், கடந்த வாரம் ரூ.600-க்கு விற்ற முல்லை, நேற்று ரூ.1600க்கு விற்பனையானது. மேலும், கோழிக்கொண்டை கிலோ ரூ.200, ஜாதி முல்லை ரூ.1000, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.200 செவ்வந்தி (வெள்ளை), ரூ.320, செண்டுமல்லி ரூ.280, 15 பூக்கள் கொண்ட ரோஸ் கட்டு 200, ஒரு தாமரைப்பூ ரூ.25-க்கும் விற்பனையானது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில்,"தொடர் மழை காரணமாக வழக்கத்தை விட பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் இன்று இந்த மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் மேலும் விலை அதிகரிக்கலாம். அடுத்த மாதம் பூக்கள் விலை குறைந்து விடும்'' என்று தெரிவித்தார்.