பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை: கோவையில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற 31-இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது கோவை-திருச்சிரோடு, வரதராஜபுரம்ரோடு உள்ளிட்ட இடங்களில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 21-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பீளமேடு போலீஸ் நிலைய பகுதியில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கோவை சிங்காநல்லூர் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது கோவை-திருச்சிரோடு, வரதராஜபுரம்ரோடு உள்ளிட்ட இடங்களில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 21-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பீளமேடு போலீஸ் நிலைய பகுதியில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.