பொள்ளாச்சி ஆனைமலையில் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலையில் பள்ளி மாணவிக்கு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனைமலை அருகே உள்ள கிராமத்தில் 16-வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கிராமம் என்பதால் இருவீட்டாரும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர். இதை காரணமாக வைத்து வாலிபர் சிறுமியுடன் புகைப்படம் எடுத்தும் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி தனது மொபைல் போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமி வாலிபர் தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசியும் குறுஞ்செய்தி அனுப்புவதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
வாலிபரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனைமலை அருகே உள்ள கிராமத்தில் 16-வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கிராமம் என்பதால் இருவீட்டாரும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர். இதை காரணமாக வைத்து வாலிபர் சிறுமியுடன் புகைப்படம் எடுத்தும் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி தனது மொபைல் போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமி வாலிபர் தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசியும் குறுஞ்செய்தி அனுப்புவதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
வாலிபரை ஆனைமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.