தடாகம் பள்ளி மாணவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் கைது..!

தடாகம் பள்ளி மாணவனிடம் ஆபாசப் படங்களைக் காட்டி சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.


கோவை: பள்ளி மாணவனிடம் ஆபாசப் படங்களைக் காட்டி சில்மிஷம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை ஆனைக்கட்டி பகுதியைச் சேர்ந்த 15-வயது மாணவன் தடாகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தான்.

பஸ் கிடைக்காததால் அவ்வழியே சென்ற மினிடோர் ஆட்டோ ஒன்றை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். ஆட்டோவை ஓட்டி வந்த நபர் பள்ளி மாணவன் நிற்பதைப் பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தினார். தொடர்ந்த அந்த மாணவனை ஆட்டோவில் முன்பக்க இருக்கையில் தனக்கு அருகில் அமர வைத்துக் கொண்டார்.

பின்னர் ஆட்டோ செல்லச் செல்ல ஆட்டோ டிரைவர் தனது செல்போனை எடுத்து பள்ளி மாணவனிடம் கொடுத்து அதில் உள்ள படங்களைப் பார் என்று கூறியிருக்கிறார். பள்ளி மாணவனும் ஆர்வ மிகுதியால் அதிலிருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தான்.

அதில் ஆபாச படங்களும் வீடியோக்களும் இருந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவனிடம் ஆட்டோ டிரைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும்,

ஆட்டோவை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துள்ளார்.

பின்னர் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாணவன் பள்ளிக்கு வர தாமதமானதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது பள்ளி மாணவன் தனக்கு நடந்த விஷயங்களை அவரிடம் கூறி உள்ளான். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் பெற்றோரைப் பள்ளிக்கு வரச்செய்தார்.

தொடர்ந்து நடந்த விவரங்களை எடுத்துக் கூறியதை அடுத்து மாணவனின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பள்ளி மாணவனிடம் ஆபாசப் படங்களைக் காட்டி சில்மிஷம் செய்த நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தெக்கு பாளையத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (40) என்பவரை போக்சோ சட்டத்தின் கிழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...