திருமணம் ஆகாத விரக்தி, குடிப்பழக்கத்தைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த இளைஞர் வீட்டில் விஷம் குடித்து, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானதில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவை: திருமணம் ஆகாத விரக்தி, குடிப்பழக்கத்தைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த இளைஞர் வீட்டில் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (33). கூலி தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆக வில்லை. இவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த காளிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
உடனே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (33). கூலி தொழிலாளி. இவருக்குத் திருமணம் ஆக வில்லை. இவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதைக் கைவிட முடியாததால் மனவேதனை அடைந்த காளிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
உடனே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.