கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் வருடாந்திர ஆய்வு நடத்தினார்.

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஆண்டுதோறும் மாவட்ட எஸ்.பி.தலைமையில் வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் வருடாந்திர ஆய்வு நடத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் வருடாந்திர ஆய்வு நடத்தினார்.

கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினத்தைப் பேரூர் டி.எஸ்.பி.திருமால் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வரவேற்றனர்.

முன்னதாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த ஆய்வை தொடங்கினார். காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களின் உடை பொருட்கள், அரசு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் காவலர் குடியிருப்பு வழக்கில் பிடிபட்ட வாகனங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் வாகன விபத்துக்களைத் தடுக்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகப் புகார் வந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் காவலரிடம் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...