அண்மைக்காலமாக உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் கனிம வளங்களைக் கொண்டு செல்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தமிழக - கேரள எல்லை சோதனைச்சாவடியில் மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக -கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் பகுதி வழியாக பாறை கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில், அண்மைக்காலமாக உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் கனிம வளங்களைக் கொண்டு செல்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, இன்று கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் திடீரென கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சரியான முறையில் சோதனை செய்கிறார்களா? அதற்கான பதிவேடுகள் எழுதப்படுகிறதா? முறையான ஆவணங்கள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு அங்கிருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பேரூர் டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக -கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் பகுதி வழியாக பாறை கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில், அண்மைக்காலமாக உரிய அனுமதி இல்லாமல் லாரிகளில் கனிம வளங்களைக் கொண்டு செல்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இன்று கிணத்துக்கடவு அருகே வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் திடீரென கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சரியான முறையில் சோதனை செய்கிறார்களா? அதற்கான பதிவேடுகள் எழுதப்படுகிறதா? முறையான ஆவணங்கள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்புமாறு அங்கிருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பேரூர் டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.