ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை கிரயம் செய்து விட்டதாக, சார் பதிவாளர் கொடுத்த புகாரில் மூவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது சார்பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கணபதியில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் பூபதி ராஜ் (37). இவர் மாநகர காவல்துறை ஆணையரிடம் வேலுசாமி, அருண் நாராயணன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் என மூவர் மீது புகார் தெரிவித்தார்.
அந்த புகார் மனுவில், தன் மகள் புவனேஸ்வரிக்கு பதிலாக, வேறு ஒரு பெண்ணை வைத்து 2017ம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து, வேலுசாமி தரப்பினர் நிலத்தை கிரயம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்.ஐ., செல்லமணி ஆகியோர், புகாருக்கு ஆளான மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை கணபதியில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் பூபதி ராஜ் (37). இவர் மாநகர காவல்துறை ஆணையரிடம் வேலுசாமி, அருண் நாராயணன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் என மூவர் மீது புகார் தெரிவித்தார்.
அந்த புகார் மனுவில், தன் மகள் புவனேஸ்வரிக்கு பதிலாக, வேறு ஒரு பெண்ணை வைத்து 2017ம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து, வேலுசாமி தரப்பினர் நிலத்தை கிரயம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்.ஐ., செல்லமணி ஆகியோர், புகாருக்கு ஆளான மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.