இதுகுறித்து இறந்தவரின் உறவினர் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சிங்கையன்புதூரில் இருசக்கர வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பாலார்பதி மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(47). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை பாலார் பகுதியில் இருந்து சிக்கலாம்பாளையம் செல்ல சாலையில் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, சிங்கையன்புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று நடந்த சென்ற முருகன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து முருகனின் உறவினர் பழனி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பாலார்பதி மதுரை வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(47). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை பாலார் பகுதியில் இருந்து சிக்கலாம்பாளையம் செல்ல சாலையில் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, சிங்கையன்புதூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று நடந்த சென்ற முருகன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து முருகனின் உறவினர் பழனி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.