கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஏழு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு..!!

புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு செட் உரிமையாளர் சுதாகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம், ராணி ராஜலட்சுமி நகரில், சுதாகர் (40) என்பவருக்கு சொந்தமான பாக்கு செட் உள்ளது.

இங்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, பாக்கு உரிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளது.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின்படி, குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார், சைல்டு லைன் அமைப்பினர் பாக்கு செட்டில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, 13 வயதிற்குட்பட்ட, 7 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார், போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு செட் உரிமையாளர் சுதாகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பணியில் அமர்த்தப்பட்ட, 7 குழந்தை தொழிலாளர்களையும், சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Newsletter

உலக இரத்த தான தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரத்த தான முகாம் நடைபெ...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...