கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஏழு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு..!!

புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு செட் உரிமையாளர் சுதாகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம், ராணி ராஜலட்சுமி நகரில், சுதாகர் (40) என்பவருக்கு சொந்தமான பாக்கு செட் உள்ளது.

இங்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, பாக்கு உரிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளது.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின்படி, குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார், சைல்டு லைன் அமைப்பினர் பாக்கு செட்டில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, 13 வயதிற்குட்பட்ட, 7 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார், போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு செட் உரிமையாளர் சுதாகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பணியில் அமர்த்தப்பட்ட, 7 குழந்தை தொழிலாளர்களையும், சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...