யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம்..!

பிரிவினை வாதம்‌ பேசுபவர்கள்‌ மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின்‌ குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில்‌ அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை: யூடியூபர் மாரிதாஸை கைது செய்ததற்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;-

இந்தியாவின்‌ முதல்‌ முப்படை தலைமைத்‌ தளபதி பிபின்‌ ராவத்‌, அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும்‌ ராணுவ அதிகாரிகள்‌ ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ உயிரிழந்திருப்பது நாடு முழுவதும்‌ பெரும்‌ சோகத்தையும், அதிர்ச்சியையும்‌ ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுக்கு ஏற்பட்ட இந்த பெரும்‌ சோகத்தை கொண்டாடும் வகையில்‌ சமூக ஊடகங்களில்‌ பதிவிட்டவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள்‌ உத்தரவிட்டுள்ளனர்‌. அதன்படி நடவடிக்கையும்‌ எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழகம் காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட யூடியூபர் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது.

மாரிதாஸை அவசர அவசரமாக கைது செய்த காவல்துறையினர்‌, முப்படை தலைமை தளபதி மரணத்தை கொண்டாடியவர்களையும்‌, நமது ராணுவத்தை அவமதிக்கும்‌ வகையில்‌ பதிவிட்டவர்களையும்‌ கைது செய்யவில்லை. அவர்கள்‌ மீது எந்த நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை. இப்போது மட்டுமல்ல, பிரிவினை வாதம்‌ பேசுபவர்கள்‌ மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இது, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற மாரிதாஸின்‌ குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும்‌ வகையில்‌ அமைந்துள்ளது.

திமுகவின் கொள்கையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் மிக கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் கட்சி திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

தங்களை எதிர்க்கும் குரலை ஒடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும். மாரிதாஸ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...